close
Choose your channels

வலியை எதிர்த்துப் போராடுவேன்… அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் பிருத்விராஜ் உருக்கம்!

Wednesday, June 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாளம், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்துவரும் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு இதனால் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களிடையே கடும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்ததும் நடிகர் பிருத்விராஜ் உருக்கமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் பிருத்விராஜ் தமிழிலும் ‘மொழி’, ‘காவியத்தலைவன்’ என்று பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் இவர் ‘லூசிஃபர்’, ‘ப்ரோ டாடி’ எனும் இரண்டு திரைப்படங்களை இயக்கி முக்கிய இயக்குநர் பட்டியலிலும் இணைந்துள்ளார். இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் ‘விளையத் புத்தர்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயன் நம்பியார் இயக்கும் இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கொச்சி மாவட்டத்திலுள்ள மறையூர் பகுதியில் நடைபெற்றபோது முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாகவும் அதில் நடிகர் பிருத்விராஜ்க்கு விபத்து ஏற்பட்டதாகவும் முதலில் தகவல் வெளியாகியது. இதையடுத்து கடந்த திங்கள் கிழமை அவருடைய வலது காலில் ஹீகோல் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகத் தகவல் கூறப்பட்டது

தற்போது அதுகுறித்து நடிகர் பிருத்விராஜ் சமூகவலைத் தளத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஆமாம்… விளையத் புத்தர் படத்தின் ஆக்ஷன் காட்சியை படமாக்கும்போது எனக்கு விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக நான் திறமையான மருத்துவ நிபுணர்களின் கைகளில் இருக்கிறேன். இப்போது நான் அதிலிருந்து மீண்டுள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஓய்வு மற்றும் பிசியோதெரபி செய்ய வேண்டும்.

அந்த நேரத்தை ஆக்கப்பூர்மாகப் பயன்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். மேலும் முழுமையாக குணமடையவும் விரைவில் செயலில் இறங்கவும் வலியை எதிர்த்துப் போராடுவேன் என்று உறுதியளிக்கிறேன். அன்பு மற்றும் அக்கறை தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் அறுவை சிகிச்சை முடிந்து இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஒய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கும் தகவலை டிவிட்டரில் வெளியிட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து ‘விளையத் புத்தர்‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத்தவிர ‘ஆடுஜீவிதம்’ திரைப்படத்திலும் அதேபோல இந்தியில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் நடிக்கும் ‘படே மியான் சோட் மியான்‘ திரைப்படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment